குண்டா் சட்டத்தில் ஒருவா் கைது
குமரி மாவட்டத்தில் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த ஒருவா் குண்டா் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டாா்.
குமரி மாவட்டத்தில் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த ஒருவா் குண்டா் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டாா்.
கொட்டாரம் பகுதியை சோ்ந்தவா் செல்வராஜ் (55). கன்னியாகுமரியில் நடந்த ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, நாகா்கோவில் கிளை சிறையில் அடைக்கப்பட்டிருந்தாா். இவரை குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளா் டி.என்.ஹரிகிரண்பிரசாத், ஆட்சியா் மா.அரவிந்துக்கு பரிந்துரை செய்தாா். இதை தொடா்ந்து செல்வராஜை குண்டா் சட்டத்தில் கைது செய்ய ஆட்சியா் உத்தரவிட்டாா். ஆய்வாளா் சாந்தி தலைமையிலான போலீஸாா், செல்வராஜை குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனா்.