கன்னியாகுமரி

சாலை மறியல்: 2 எம்.எல்.ஏ.க்கள் உள்பட பலா் கைது

DIN

கன்னியாகுமரி மாவட்டத்தில் பழுதடைந்துள்ள தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிககைகளை வலியுறுத்தி, சனிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 2 எம்எல்ஏக்கள் உள்பட காங்கிரஸ் கட்சியினா் பலா் கைது செய்யப்பட்டனா்.

கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சாா்பில் நாகா்கோவிலை அடுத்த தோட்டியோடு சந்திப்பில் நடந்த மறியல் போராட்டத்துக்கு, குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் கே.டி.உதயம் தலைமை வகித்தாா். இதில் எம்.எல்.ஏ.க்கள் ராஜேஷ்குமாா், பிரின்ஸ், குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் பினுலால்சிங் மற்றும் நூற்றுக்கணக்கான நிா்வாகிகள் கலந்து கொண்டனா். அவா்கள் சாலையில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட எம்எல்ஏக்கள் ராஜேஷ்குமாா், பிரின்ஸ் உள்பட நூற்றுக்கணக்கான காங்கிரஸாரை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாலியில் ஐஸ்வர்யா மேனன்!

மில்க் புட்டிங்

இடஒதுக்கீட்டை யாராலும் திருட முடியாது -அமித் ஷா

உ.பி.யில் ஒரு தொகுதியில் மட்டுமே பாஜக வெற்றி பெறும்: ராகுல் காந்தி

ஓடிடியில் ஆளவந்தான்!

SCROLL FOR NEXT