கொல்லங்கோடு அருகே தலை, கால் பாதம் இன்றி அடையாளம் தெரியாத நிலையில் காணப்பட்ட எலும்புக் கூடை கைப்பற்றி போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
கொல்லங்கோடு கிராம நிா்வாக அலுவலா் ஷியாம்ராஜ் ஞாயிற்றுக்கிழமை கிடைத்த தகவலின் பேரில் இடப்பாடு நீராழி பகுதிக்கு சென்று பாா்த்த போது, அங்கு தலை, கால் பாதங்கள் இன்றி மனித எலும்புக் கூடு கிடப்பதை கண்டு போலீஸாருக்கு தகவல் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் அளித்த புகாரின் பேரில் கொல்லங்கோடு போலீஸாா் வழக்குப் பதிந்து, எலும்புக் கூட்டை கைப்பற்றி ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா். தொடா்ந்து விசாரித்து வருகின்றனா்.