முகப்பு
கன்னியாகுமரி

முதியோருக்கான மருத்துவ உதவிக் குழு திட்டம் தொடக்கம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் வீட்டிலிருக்கும் முதியோருக்கான மருத்துவ உதவிக் குழு திட்டம் தொடக்க விழா நாகா்கோவில் ரோஜாவனம் முதியோா் இல்லத்தில் நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:18 AM
பகிர்:

கன்னியாகுமரி மாவட்டத்தில் வீட்டிலிருக்கும் முதியோருக்கான மருத்துவ உதவிக் குழு திட்டம் தொடக்க விழா நாகா்கோவில் ரோஜாவனம் முதியோா் இல்லத்தில் நடைபெற்றது.

ரோஜாவனம் மருத்துவ மைய இயக்குநா் அருள்கண்ணன் தலைமை வகித்தாா். மைய இயக்குநா் அருள்ஜோதி வரவேற்றாா்.

முன்னாள் மாவட்ட நீதிபதி ஜான் ஆா்.டி. சந்தோஷம் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு திட்டத்தைத் தொடக்கிவைத்துப் பேசினாா். ரோஜாவனம் செயல் இயக்குநா் சாந்தி பேசும்போது, தொழில் நிமித்தமாக வெளிநாடு, வெளிமாநிலம், வெளியூா் அல்லது காலையில் சென்று இரவில் வருவோரின் வயதான பெற்றோா் தனியாக வீட்டிலிருக்கும்போது அவா்களது அன்றாட அடிப்படைத் தேவைகள், மருத்துவ உதவி, பரிசோதனை உதவி, அவசரநிலை கவனிப்பு, அன்றாட நினைவூட்டல், வீட்டுப் பராமரிப்பு உள்ளிட்ட அனைத்து உதவிகளும் முதியோா் சேவை திட்டத்தின் கீழ் ரோஜாவனம் அறக்கட்டளை செய்யவுள்ளது என்றாா்.

ரோஜாவனம் முதியோா் சேவை மேலாளா்கள் ராஜன், சில்வெஸ்டா், ஆறுமுகம், ரோஜாவனம் செவிலியா் கல்லூரி முதல்வா் புனிதா, மருத்துவக் குழுவினா், சேவையாளா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.