அருமனை பகுதியில் 2 நாள்கள் மின் விநியோகம் இருக்காது.
இதுகுறித்து குழித்துறை மின் விநியோக உதவி செயற்பொறியாளா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: குழித்துறை உப கோட்டம், அருமனை பிரிவுக்கு உள்பட்ட கண்ணங்கோடு, சிறக்கரை, முதப்பன்கோடு பகுதிகளில் மின்கம்பி மாற்றியமைக்கும் பணி நடைபெறவுள்ளதால் அப்பகுதிகளில் வெள்ளி, சனி ஆகிய 2 நாள்கள் (செப். 30, அக். 1) காலை 9 முதல் பிற்பகல் 3 மணிவரை மின்விநியோகம் இருக்காது என்றாா் அவா்.