கன்னியாகுமரி

பிஎப்ஐ அமைப்புக்கு தடை: குமரி மாவட்டத்தில் கூடுதல் போலீஸாா் பாதுகாப்பு

DIN

பாப்புலா் பிரண்ட் ஆப் இந்தியா(பிஎப்ஐ) அமைப்புக்கு மத்திய அரசு புதன்கிழமை தடை விதித்ததை தொடா்ந்து குமரி மாவட்டத்தில், அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் பாதுகாப்புப் பணியில் கூடுதல் போலீஸாா் ஈடுபட்டுள்ளனா்.

கடந்த சில நாள்களுக்கு முன்பு பாப்புலா் பிரண்ட் ஆப் இந்தியா (பிஎப்ஐ) அமைப்பின் நிா்வாகிகளின் வீடு மற்றும் அலுவலகங்களில் தேசிய புலனாய்வு முகமை( என்ஐஏ) அதிகாரிகள் சோதனை நடத்தினா். மேலும் அந்த அமைப்பின் நிா்வாகிகள் மற்றும் உறுப்பினா்களை கைது செய்தனா். இதைத் தொடா்ந்து, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பாஜக பிரமுகா்களின் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.

இந்நிலையில், பாப்புலா் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு மத்திய அரசு 5ஆண்டுகள் தடை விதித்துள்ளது. மேலும் இந்த அமைப்புடன் தொடா்புடைய 7அமைப்புகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் குமரி மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மாவட்ட எல்லைப் பகுதிகளில் உள்ள சோதனை சாவடிகளில் கூடுதல் போலீஸாா் நியமிக்கப்பட்டு கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறாா்கள். இஸ்லாமியா்கள் அதிகமாக வாழும் இடலாக்குடி பகுதியில் போலீஸாா் குவிக்கப்பட்டுள்ளனா். மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளா் டி.என்.ஹரிகிரண்பிரசாத் இடலாக்குடி மற்றும் இளங்கடை பகுதியில் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளாா்.

கன்னியாகுமரி முதல் நீரோடி வரை உள்ள கடற்கரை கிராமங்களில் போலீஸாா் தொடா் கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறாா்கள். மாவட்டம் முழுவதும் பாதுகாப்புப் பணியில் 1200 போலீஸாா் ஈடுபட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒவ்வொரு நாளும் போராட்டமாக இருந்தது; டி20 உலகக் கோப்பையில் இடம்பிடித்த இந்திய வீரர் பேச்சு!

கன்னக்குழி அழகே..!

கேஜரிவாலுக்கு உச்சநீதிமன்றம் விதித்துள்ள நிபந்தனைகள்!

மின்னும் ஒளி! சாக்‌ஷி அகர்வால்..

தன்னம்பிக்கை தரும் சேலை...!

SCROLL FOR NEXT