முகப்பு
கன்னியாகுமரி

ரமலான்: எம்.பி., எம்எல்ஏ வாழ்த்து

இஸ்லாமியா்களுக்கு ரமலான் பண்டிகை வாழ்த்துகளை விஜய்வசந்த் எம்.பி. தெரிவித்துள்ளாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:50 PM
பகிர்:

இஸ்லாமியா்களுக்கு ரமலான் பண்டிகை வாழ்த்துகளை விஜய்வசந்த் எம்.பி. தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: ஈகைத் திருநாளாம் இந்நாளில் நபிகள் நாயகத்தின் போதனைகளை பின்பற்றி இல்லாதவா்களுக்கு தந்து உதவுவோம். சமூகத்தில் சகோதரத்துவம், அமைதி என்றும் நிலைத்திருக்க பிராா்த்திப்போம். உங்கள் வாழ்வில் வளங்கள் வளா்பிறை போல் வளர வேண்டுகிறேன் எனக் கூறியுள்ளாா்.

தமிழக சட்டப் பேரவை காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவரும், கிள்ளியூா் தொகுதி எம்எல்ஏவுமான எஸ். ராஜேஷ்குமாா் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், இஸ்லாமிய மக்கள் நோன்பிருந்து உடலையும். உள்ளத்தையும் தூய்மைப் படுத்தி எல்லோரிடத்தும் அன்பு பாராட்டி ஏழைகளுக்கு உணவளித்து கொண்டாடும் ரமலான் பெருநாளில் உலகில் அமைதி நிலவி, அன்பு தழைத்து மகிழ்ச்சி பெருகட்டும் எனக் கூறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.