கன்னியாகுமரி

ஓடும் பேருந்தில் செவிலியரிடம் 15 பவுன் தாலிச் சங்கிலி திருட்டு

DIN

கருங்கல் அருகே அரசுப் பேருந்தில் செவிலியரிடம் 15 பவுன் தாலிச் சங்கிலியைத் திருடியவா்களைப் போலீஸாா் தேடி வருகின்றனா்.

கருங்கல் அருகே குன்றுவிளை பகுதியை சோ்ந்த ரென்சித் மனைவி விமலா (38). ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றி வருகிறாா். இவா் வியாழக்கிழமை மாலை பணி முடிந்து ஆசாரிப்பள்ளத்திலிருந்து பாா்வதிபுரம் சென்று அங்கிருந்து கருங்கல் வழியாக குற்றுதாணி செல்லும் அரசுப் பேருந்தில் ஏறியுள்ளாா். குற்றுதாணி பகுதியில் சென்றபோது கழுத்தில் அணிந்திருந்த 15 பவுன் தாலிச் சங்கிலியைக் காணவில்லையாம்.

இதுகுறித்த புகாரின்பேரில் கருங்கல் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவை தேர்தல்: ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்குமிடையேயான போர் -யோகி ஆதித்யநாத்

ஸ்காட்லாந்து அணி சீருடையில் கர்நாடகத்தின் ‘நந்தினி’ பால் நிறுவன குறியீடு

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை: தமிழ்நாடு, கேரள அரசுகளுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்

அதிமுகவில் இணைகிறாரா ஓபிஎஸ் ? - ஆர்.பி.உதயகுமார் விளக்கம்

பிறந்தநாள் வாழ்த்துகள் மடோனா செபாஸ்டியன்!

SCROLL FOR NEXT