முகப்பு
இந்தியா

போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்

உலகளாவிய போர் அச்சுறுத்தல்களுக்குப் பேச்சுவார்த்தை ஒன்றே தீர்வு என குடியரசுத் துணைத்தலைவர் கூறியது குறித்து...

Updated On : 21 மார்ச், 2026 at 11:01 AM
குடியரசு துணைத்தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் - கோப்புப் படம்
பகிர்:

உலகளாவிய போர் அச்சுறுத்தல்களுக்கு தீர்வு காண்பதற்கான ஒரே வழி பேச்சுவார்த்தைதான் என குடியரசுத் துணைத்தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இந்திய இளைஞர் நாடாளுமன்றத்தின் 29 வது தேசிய அமர்வின் கூட்டம் நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ். அரங்கில் நடைபெற்றது.

நான்கு நாள்கள் நடைபெறும் இந்த நிகழ்வின் கருப்பொருள் 'இந்திய மொழிகள் மற்றும் வளர்ந்த இந்தியா - 2047' என்பதாகும்.

அங்கு உரையாற்றிய அவர், “தாய்மொழியில் பேசுவது என்பது பிராந்தியத்தைக் குறிப்பதல்ல; மாறாகத் தனித்துவத்தைக் குறிப்பதாகும்.

உலகம் முழுவதும் போரின் அச்சுறுத்தலில் இருக்கும்போது, ​​பேச்சுவார்த்தை மட்டுமே தீர்வுகளுக்கு வழிவகுக்கும். ஆரோக்கியமான விவாதம், மாறுபட்ட கண்ணோட்டங்களைக் கேட்டறிதல் மற்றும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகளைக் கண்டறிதல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை இந்நிகழ்வு நமக்குக் கற்றுத் தருகிறது.

மொழிகள் குறித்த இந்தத் தலைப்பு காலத்தின் தேவையாகும். நாட்டில் எண்ணற்ற மொழிகள் உள்ளன. ஒவ்வொருவரும் தங்கள் தாயை நேசிக்கிறார்கள். அதேபோல, ஒவ்வொருவரும் தங்கள் தாய்மொழியை நேசிக்கிறார்கள்.

ஆனால் அதற்காக நாம் மற்றொருவரின் தாயை மதிக்கக் கூடாது என்று அர்த்தமல்ல. நாம் நமது தாய்மொழியில் பேசும்போது, ​வட்டார வழக்கில் பேசுவதில்லை. வட்டார வழக்கில் பேசுவதுதான் நமது தனித்துவம்” என்று வலியுறுத்தினார்.

summary

Vice President C.P. Radhakrishnan has said that dialogue is the only way to find a solution amid global threats of war.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.