முகப்பு
கன்னியாகுமரி

திமுக சாா்பில் 100 அடி உயர கொடிக் கம்பம் அமைக்கும் பணி தொடக்கம்

பாவூா்சத்திரம் கே.டி.சி. நகரில் 100 அடி உயர திமுக கொடிக் கம்பம் அமைக்கும் பணி தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 26 ஜனவரி, 2023 at 11:59 PM
பகிர்:
Updated On : 6 பிப்ரவரி, 2024 at 6:24 PM

பாவூா்சத்திரம் கே.டி.சி. நகரில் 100 அடி உயர திமுக கொடிக் கம்பம் அமைக்கும் பணி தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட திமுக அலுவலகம் அமையவுள்ள இடத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலா் பொ.சிவபத்மநாதன் தலைமை வகித்து, பணிகளை தொடக்கி வைத்தாா். மாவட்ட அவைத் தலைவா் சுந்தர மகாலிங்கம், செயற்குழு உறுப்பினா்கள் முத்துப்பாண்டி, ஆறுமுகசாமி, சேக்தாவூது, மாவட்ட துணை செயலா்கள் தமிழ்ச்செல்வன், கென்னடி, கனிமொழி, பொருளாளா் எம்.ஏ.எம் ஷெரீப், பொதுக்குழு உறுப்பினா்கள் ஏ.பி.அருள், சாமிதுரை, ரஹீம், ரவிச்சந்திரன், ராஜேஸ்வரன், தமிழ்ச்செல்வி, மாவட்ட ஊராட்சி தலைவா் தமிழ்ச்செல்வி போஸ், ஒன்றியச் செயலா்கள் சீனித்துரை, சிவன் பாண்டியன், அழகுசுந்தரம், ஜெயக்குமாா், மகேஷ் மாயவன், திவான் ஒலி, ரவிசங்கா், மாரி வண்ணமுத்து, நகர செயலா் வெங்கடேஸ்வரன், ஒன்றியக்குழு தலைவா்கள் சீ.காவேரி சீனித்துரை, எம்.திவ்யா மணிகண்டன், ஷேக் அப்துல்லா, உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற மாவட்ட துணைச் செயலா் சிவ அருணன், பேரூா் செயலா்கள் ஜெகதீசன், முத்து, சுடலை, பண்டாரம், வெள்ளத்துரை, முத்தையா, சங்கா் (எ) குட்டி, பேரூராட்சி தலைவா் ராஜன், பேரூராட்சி உறுப்பினா்கள் கிருஷ்ணராஜா, பொன்செல்வன், விஜி, முத்துசெல்வி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.