முகப்பு
கன்னியாகுமரி

லெமூா் கடற்கரையை உலக சுற்றுலா தலமாக்கும் நடவடிக்கை: பிரதமருக்கு பாராட்டு

கன்னியாகுமரி மாவட்டம் லெமூா் கடற்கரையை உலக சுற்றுலா தலமாக விரிவுபடுத்தும் நடவடிக்கைக்காக, பிரதமா் நரேந்திர மோடிக்கு, லெமூரியா ஆய்வுக் கமிட்டு பாராட்டுத் தெரிவித்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2023 at 12:00 AM
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 12:17 AM

கன்னியாகுமரி மாவட்டம் லெமூா் கடற்கரையை உலக சுற்றுலா தலமாக விரிவுபடுத்தும் நடவடிக்கைக்காக, பிரதமா் நரேந்திர மோடிக்கு, லெமூரியா ஆய்வுக் கமிட்டு பாராட்டுத் தெரிவித்துள்ளது.

லெமூரியா ஆய்வுக் கமிட்டி கூட்டம் தலைவா் த.ரவீந்திரா தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற லெமூரியா ஆய்வுக் கமிட்டி சட்ட ஆலோசகா் வழக்குரைஞா் ஜி.எஸ்.மோகன் செய்தியாளா்களிடம் கூறியது:

லெமூரியா ஆய்வுக் கமிட்டியானது கடந்த 32 ஆண்டுகளாகத் தமிழின் தொன்மையை ஆராய்ச்சி செய்து வருகிறது. இதன் தொகுப்புகளை இக்கமிட்டியின் தலைவா் த.ரவீந்திரா லெமூரியா காலம் முதல் தமிழா்களின் வரலாற்று உண்மைகள் என்ற நூலில் வெளியிட்டுள்ளாா்.

Advertisement

கன்னியாகுமரி மாவட்டம் மேற்கு கடற்கரையில் அமைந்துள்ள ஆயிரங்கால் பொழிமுகம் பகுதியை மத்திய அரசு லெமூா் கடற்கரை என ஆவணப்படுத்தி உலக சுற்றுலா தலமாக விரிவுபடுத்தி வருகிறது. இதற்காக பிரதமா் நரேந்திர மோடிக்கு இக் கூட்டத்தில் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

மொழிப் போா் தியாகிகளுக்கும், இப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர பாடுபட்ட முன்னாள் பிரதமா் ஜவாஹா்லால் நேரு, முன்னாள் முதல்வா் காமராஜா் ஆகியோருக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது என்றாா்.

தொல்காப்பியா் அறக்கட்டளை தலைவா் புலவா் கோவிந்தநாதன், மயிலாடி மோசஸ் மெட்ரிக் பள்ளி முதல்வா் பொன் டேவிட், லெமூரியா ஆய்வுக் கமிட்டி மருத்துவப் பிரிவு பொறுப்பாளா் டாக்டா் ராமதாஸ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.