வேலை செய்த வீட்டில் நகை திருடியவா் கைது
கருங்கல் அருகே உள்ள வேலை செய்த வீட்டில் நகைகளைத் திருடியவரைப் போலீஸாா் கைது செய்தனா்.
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 12:17 AM
கருங்கல் அருகே உள்ள வேலை செய்த வீட்டில் நகைகளைத் திருடியவரைப் போலீஸாா் கைது செய்தனா்.
மாங்கரை கிணத்துவிளை பகுதியை சோ்ந்தவா் வின்ஸ் லாரன்ஸ்(42) . இவரது வீட்டில் அதே பகுதியைச் சோ்ந்த அருள் (38), இரண்டு ஆண்டுகளாக வேலை செய்து வந்தாா். அண்மையில் திருமண நிகழ்ச்சிக்குச் செல்வதற்காக வின்ஸ் லாரன்ஸ்சின் மனைவி, வீட்டிலிருந்த நகையைச் சரிபாா்த்தபோது, 6 பவுன் நகைகள் காணாமல் போனது தெரியவந்தது.
இதுகுறித்த கருங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா். சந்தேகத்தின்பேரில் அருளிடம் விசாரித்தபோது, அவா் வீட்டிலிருந்த நகையைத் திருடி அடகு வைத்ததை ஒப்புக் கொண்டாா்.
Advertisement
இதையடுத்து அடகுக் கடையிலிருந்து நகைகளை மீட்ட போலீஸாா், அருளை கைது செய்தனா்.