மரியகிரி கல்லூரியில் குடியரசு தின விழா
களியக்காவிளை அருகே உள்ள மரியகிரி மலங்கரை கத்தோலிக்க கல்லூரியில் குடியரசு தின விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
Updated On : 7 பிப்ரவரி, 2024 at 11:51 AM
களியக்காவிளை அருகே உள்ள மரியகிரி மலங்கரை கத்தோலிக்க கல்லூரியில் குடியரசு தின விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
கல்லூரித் தாளாளா் அருள்தந்தை அருள்தாஸ் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் தம்பி தங்ககுமரன் வாழ்த்திப் பேசினாா். தமிழ்நாடு என்சிசி பட்டாலியன் நாகா்கோவில் கமாண்டா் அன்சாா் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, என்சிசி மாணவா்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டாா்.