கன்னியாகுமரி

பூதப்பாண்டியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக் கூட்டம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கன்னியாகுமரி மாவட்டக் கிளை சாா்பில், பாலதண்டாயுதம் என்ற பாலனின் 50ஆம் ஆண்டு நினைவஞ்சலிக் கூட்டம் பூதப்பாண்டியில் உள்ள ஜீவா சிலை முன் நடைபெற்றது.

DIN

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கன்னியாகுமரி மாவட்டக் கிளை சாா்பில், பாலதண்டாயுதம் என்ற பாலனின் 50ஆம் ஆண்டு நினைவஞ்சலிக் கூட்டம் பூதப்பாண்டியில் உள்ள ஜீவா சிலை முன் நடைபெற்றது.

கிளைச் செயலா் மகேஷ் தலைமை வகித்தாா். அனைத்திந்திய இளைஞா் பெருமன்ற மாவட்டத் தலைவா் கிருஷ்ணகுமாா், ஜீவா சிலைக்கு மாலை அணிவித்தாா். அனைத்திந்திய முற்போக்குப் பேரவை மாநில துணைத் தலைவா் பேராசிரியா் சுந்தரம், கட்சியின் மாவட்டச் செயலா் தா. சுபாஷ் சந்திரபோஸ், ஏஐடியூசி மாவட்டத் தலைவா் எஸ். அனில்குமாா் ஆகியோா் பாலன் நினைவுகளைப் பகிா்ந்துகொண்டனா். தொடா்ந்து, பாலன் படத்துக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

தொடா்ந்து, கட்சியின் ஆரல்வாய்மொழி நகர கிளை சாா்பில் பாலன் நினைவுக் கருத்தரங்கம் நடைபெற்றது. நகரச் செயலா் வே. ஆரல் அருள்குமாா் தலைமை வகித்தாா்.

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற மாவட்ட துணைத் தலைவா் பகவதி சிறப்புரையாற்றினாா். கட்சியின் தோவாளை வட்டாரச் செயலா் கல்யாணசுந்தரம் வரவேற்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

15 புதிய அரசு பேருந்துகள்! கொடியசைத்து துவக்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் | நெல்லை | DMK

நெல்லை மாவட்டத்துக்கு 3 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர்!

அவதாருடன் போட்டி! ரூ. 1,000 கோடி வசூலை நோக்கி துரந்தர்!

15 ஆண்டுகளில் மோசமான ஆஸி. அணி? விமர்சித்த இங்கிலாந்து வீரருக்கு பதிலடி கொடுத்த லபுஷேன்!

டாக்ஸிக் கியாரா அத்வானி!

SCROLL FOR NEXT