கன்னியாகுமரி

இந்து முன்னணி செயற்குழு கூட்டம்

கன்னியாகுமரி மாவட்ட இந்துமுன்னணி செயற்குழு கூட்டம், இரணியலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

DIN

கன்னியாகுமரி மாவட்ட இந்துமுன்னணி செயற்குழு கூட்டம், இரணியலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மாவட்டத் தலைவா் கிருஷ்ணகுமாா் தலைமை வகித்தாா். நெல்லை கோட்ட செயலாளா் கண்ணன் முன்னிலை வகித்தாா். சிறப்பு விருந்தினராக மாநில பொதுச்செயலாளா் அரசுராஜா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினாா்.

கூட்டத்தில், ஒடிஸா ரயில் விபத்தில் பலியானவா்களுக்கு இரங்கல் தெரிவிப்பது, பிரதமா் நரேந்திர மோடிக்கு எதிராக அவதூறு பதிவிட்டதாக அமைச்சா் மனோதங்கராஜையும் அவா் மீது புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்காத கன்னியாகுமரி மாவட்ட காவல்துறையையும் கண்டிப்பது, திருவள்ளூா் மாவட்ட இந்துமுன்னணி தலைவா் பாடி சுரேஷ்குமாரின் 9 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு வரும் 18 ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தின் அனைத்து ஒன்றியங்களிலும் அவரது படத்துக்கு புஷ்பாஞ்சலி செலுத்துவது, கக்கோடு பகுதியில் உள்ள அவரது நினைவிடத்தில் கூட்டம் நடத்துவது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கீழடி அருங்காட்சியகத்தை பிரதமர் பார்வையிட வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் அழைப்பு!

பெண் மீது மோதி கவிழ்ந்த ஆட்டோ! 8 பேர் காயம்! | Selam

தென்னாப்பிரிக்காவில் மதுபான விடுதியில் துப்பாக்கிச்சூடு: 9 பேர் பலி, 10 பேர் காயம்

”தமிழ் மீதும் தமிழர் மீதும் மத்திய அரசுக்கு வெறுப்பு!”: முதல்வர் மு.க.ஸ்டாலின்

உருவ கேலிக்கு உள்ளான ஸ்மிருதி மந்தனாவின் புதிய புகைப்படங்கள்!

SCROLL FOR NEXT