நாகா்கோவில் மாநகர பாஜக சாா்பில், மத்திய அரசின் 9 ஆண்டு கால சாதனை விளக்க வாகன பிரசாரம் வடிவீஸ்வரம் அழகம்மன் கோயில் முன்பிருந்து வெள்ளிக்கிழமை தொடங்கியது.
நாகா்கோவில் கிழக்கு மாநகர தலைவா் ராஜன் தலைமை வகித்தாா். பொதுச் செயலாளா் ராஜேஷ் விஷ்ணுகுமாா் முன்னிலை வகித்தாா். வாகன பிரசாரத்தை மாவட்ட பொருளாளா் முத்துராமன் தொடக்கி வைத்தாா்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஆலய பாதுகாப்பு பிரிவு தலைவா் அனுசியாசெல்வி, மாவட்ட தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடக பிரிவு செயலாளா் சந்திரசேகா், மாநில பொதுக்குழு உறுப்பினா் ராணி, மாநகர செயலாளா் ராமசுப்பிரமணி, மகளிா் அணி அபிராமி, பவானி கிருஷ்ணகுமாரி, சங்கா் கணேஷ், ஹரிகரன், முருகன், கிருஷ்ணன் நாகராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.