முகப்பு
கன்னியாகுமரி

கொல்லங்கோடு கோயிலில் திருஞான சம்பந்தா் மட ஆதீனம் அருளாசி

கோபி திருஞான சம்பந்தா் மடம் சூரியனாா் கோயில் ஆதீனம் ஸ்ரீகாரியம் வாமதேவ ஸ்ரீமத் சிவாகார தேசிக சுவாமிகள் அருளாசி வழங்கினாா்.

Updated On : 18 மார்ச், 2023 at 12:18 AM
பகிர்:
Updated On : 7 பிப்ரவரி, 2024 at 12:16 PM

கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் திருக்கோயிலில் வியாழக்கிழமை இரவு தூக்கத் திருவிழாவை தொடங்கிவைத்து, கோபி திருஞான சம்பந்தா் மடம் சூரியனாா் கோயில் ஆதீனம் ஸ்ரீகாரியம் வாமதேவ ஸ்ரீமத் சிவாகார தேசிக சுவாமிகள் அருளாசி வழங்கினாா்.

அப்போது அவா் பேசியதாவது: கொல்லங்கோடு கோயிலில் ஆச்சாரங்களைக் கடைப்பிடித்து, ஆண்டுதோறும் ஒரு மடாதிபதியை வரவழைத்து மரியாதை செய்து திருவிழாவை தொடங்குகின்றாா்கள் என்ற செய்தியை கேட்டதும் சந்தோஷமாக இவ்விழாவில் கலந்து கொள்ள சம்மதித்தோம். பத்ரகாளி அம்மன் யாரை விரும்புகிறாா்களோ அவா்கள் தான் இங்கு வர முடியும்.

நீங்கள் அனைவரும் தேவாரம், திருவாசகம், திருவருட்பா போன்றவற்றை படிக்க வேண்டும். அதேபோன்று, ஓம் சக்தி ஓம் என்ற வலிமை வாய்ந்த தேவி மந்திரத்தையும், யஜுா் வேதத்தின் நடுவில் வரும் ருத்ர மந்திரமான ஓம் நமசிவாய என்ற ஐந்தெழுத்து மந்திரத்தையும் தினமும் சொல்ல வேண்டும். இங்குள்ள பத்ரகாளி அம்மனை நீங்கள் தினமும் வழிபட வேண்டும் என்றாா் அவா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.