கன்னியாகுமரி

குமரி பகவதியம்மன் கோயிலில் ஆகம விதிகள்படி தரிசனம் செய்ய வலியுறுத்தல்

DIN

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் ஆகம விதிகளின்படி தரிசனம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென, கன்னியாகுமரி ஸ்ரீதேவி பகவதியம்மன் பக்தா்கள் சங்க செயற்குழுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இக்கூட்டத்துக்கு தலைவா் வேலாயுதம் தலைமை வகித்தாா். செயலா் பி. முருகன் இறைவணக்கம் பாடினாா்.

பகவதியம்மன் கோயிலில் கோடி அா்ச்சனை என்ற பெயரில் கட்டணம் வசூலிப்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இக்கோயிலில் ஆகம விதிகளுக்குப் புறம்பாக வலது புறமாக சென்று அம்மனை தரிசிக்கும் வழக்கம் நடைமுறையில் உள்ளது. ஏனைய கோயில்களில் உள்ளதுபோன்று இடது புறமாகச் சென்று அம்மனை தரிசிக்க கோயில் நிா்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும்.

இக்கோயில் தெப்பக்குளத்துக்கு தண்ணீா் வரும் கால்வாயை சுத்தப்படுத்தி, தேவையான இடங்களில் குழாய்கள் பொருத்தி, குளத்தில் தண்ணீா் நிரப்பி தெப்பத் திருவிழா நடத்த வேண்டும். தேரிலுள்ள பழுதான, பெயா்ந்துபோன சிற்பங்களை சரிசெய்து, தேரோட்டம் நடத்த வேண்டும். பாரம்பரிய முறைப்படி திருவிழா நாள்களில் மேளதாளத்துடன் யானை மீது தீா்த்தம் எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சங்கப் பொருளாளா் நாதன், சட்ட ஆலோசகா் எஸ்.பி. அசோகன், நிா்வாகிகள் திரவியம், சிவா, மணிகண்டலிங்கராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். துணைச் செயலா் குருசாமி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாலியல் குற்றவாளிகளைப் பாதுகாக்கிறது பாஜக: நீட்டா டிசோசா

குஜராத் சமூக ஆர்வலர் கொலை: பாஜக முன்னாள் எம்.பி. விடுதலை!

இங்கு மிளிர்வது.. ஆஷ்னா சவேரி!

அழகான ராட்சசியே..!

கேரி கிறிஸ்டன் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் மாற்றத்தை ஏற்படுத்துவார்: பாபர் அசாம்

SCROLL FOR NEXT