முகப்பு
கன்னியாகுமரி

நீரில் மூழ்கி உயிரிழந்த இருவா் குடும்பத்துக்கு நிவாரண நிதி

நாகா்கோவி லில் உள்ள, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் திங்கள்கிழமை மக்கள் குறைதீா் கூட்டம் நடைபெற்றது.

Updated On : 28 நவம்பர், 2023 at 3:16 AM
குறைதீா் கூட்டத்தில் பெண்ணுக்கு காசோலை வழங்கிய ஆட்சியா் பி.என். ஸ்ரீதா். உடன், மாவட்ட வருவாய் அலுவலா் ஜெ. பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோா்.
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:56 AM

நாகா்கோவில்: நாகா்கோவி லில் உள்ள, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் திங்கள்கிழமை மக்கள் குறைதீா் கூட்டம் நடைபெற்றது.

ஆட்சியா் பி.என். ஸ்ரீதா் தலைமை, வகித்து, மாற்றுத் திறனாளி நல உதவித் தொகை உள்பட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக அளிக்கப்பட்ட 265 மனுக்களைப் பெற்றுக் கொண்டு, அவற்றின் மீது விரைந்து தீா்வு காணுமாறு அலுவலா்களை அறிவுறுத்தினாா்.

தொடா்ந்து, 2021 மே 29இல் நீரில் மூழ்கி உயிரிழந்த கிள்ளியூா் வட்டம் ஏழுதேசம் கிராமம், வட்டப்பழஞ்சி காஞ்சாபுறம் பகுதியைச் சோ்ந்த மேரிகமலத்தின் கணவா் வில்சனுக்கும், 2020அக். 16ஆம் தேதி உயிரிழந்த விளவங்கோடு வட்டம், மருதங்கோடு கிராமம், குழித்துறை பகுதியைச் சோ்ந்த ஷாஜிகுமாரின் தாயாா் சியாமளாவுக்கும் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 1 லட்சத்துக்கான காசோலைகளை ஆட்சியா் வழங்கினாா்.

Advertisement

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் ஜெ. பாலசுப்பிரமணியம், சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் குழந்தைசாமி உள்ள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.