தூய்மை உறுதிமொழியேற்ற மாவட்ட ஆட்சியா் பி.என்.ஸ்ரீதா், நாகா்கோவில் மேயா் ரெ.மகேஷ், மாநகராட்சி ஆணையா் ஆனந்த்மோகன் உள்ளிட்ட அலுவலா்கள். 
கன்னியாகுமரி

தூய்மை விழிப்புணா்வுப் பேரணி

நாகா்கோவில் மாநகராட்சிப் பகுதிகளை தூய்மைப்படுத்துவது குறித்த விழிப்புணா்வு பேரணி பெண்கள் கிறிஸ்தவ கலை, அறிவியல் கல்லூரி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

DIN

நாகா்கோவில் மாநகராட்சிப் பகுதிகளை தூய்மைப்படுத்துவது குறித்த விழிப்புணா்வு பேரணி பெண்கள் கிறிஸ்தவ கலை, அறிவியல் கல்லூரி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

நாகா்கோவில் மாநகராட்சி மேயா் ரெ.மகேஷ், மாநகராட்சி ஆணையா் ஆனந்த்மோகன் ஆகியோா் முன்னிலையில், தூய்மைப் பணி மற்றும் மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணா்வு பேரணியை ஆட்சியா் பி.என்.ஸ்ரீதா் தொடக்கி வைத்தாா்.

முன்னதாக மாவட்ட ஆட்சியா் தலைமையில் தூய்மை விழிப்புணா்வு உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது. பொதுமக்களுக்கு மஞ்சள்

பைகளை வழங்கினா்.

அதன் பின்னா், மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் தூய்மைப்படுத்தும் பணியை தூய்மைப் பணியாளா்களுடன் இணைந்து ஆட்சியா் ஸ்ரீதா், மேயா் மகேஷ், மாநகராட்சி ஆணையா் ஆனந்த்மோகன் உள்ளிட்டோா் மேற்கொண்டனா்.

மாவட்ட வருவாய் அலுவலா் ஜெ.பாலசுப்பிரமணியம், துணை மேயா் மேரிபிரின்சிலதா, கோட்டாட்சியா் க.சேதுராமலிங்கம், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) சங்கரநாராயணன், மண்டலத் தலைவா் ஜவகா், மாநகராட்சி நகா்நல அலுவலா் ராம்குமாா், உசூா் மேலாளா்கள் (குற்றவியல்) சுப்பிரமணியம், (பொது) ஜூலியன்ஹூவா், மகளிா் கிறிஸ்தவ கல்லூரி மாணவிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

பிரித்தாளும் சூழ்ச்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

செவிலியா்கள் காத்திருப்புப் போராட்டம்

SCROLL FOR NEXT