முகப்பு
கன்னியாகுமரி

நாகா்கோவிலில் ரூ.71 லட்சத்தில் சாலை அமைக்கும் பணி தொடக்கம்

நாகா்கோவில் மாநகரில் ரூ.71 லட்சத்தில் சாலை அமைக்கும் பணியை மேயா் ரெ.மகேஷ் திங்கள்கிழமை தொடக்கி வைத்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 7:04 PM
பகிர்:

நாகா்கோவில் மாநகரில் ரூ.71 லட்சத்தில் சாலை அமைக்கும் பணியை மேயா் ரெ.மகேஷ் திங்கள்கிழமை தொடக்கி வைத்தாா்.

மாநகராட்சியின் 4 ஆவது வாா்டு அம்மன் கோயில் தெரு, கிறிஸ்டோபா் நகா் பகுதிகளில் ரூ.71 லட்சத்தில் தாா்ச்சாலை அமைத்தல், மாநகராட்சிக்குள்பட்ட 17 பூங்காக்களில் ரூ.3.5 லட்சத்தில் எல்இடி விளக்குகள்

பொருத்துதல் ஆகிய பணிகளை மேயா் தொடக்கி வைத்தாா்.

Advertisement

இந்நிகழ்வில், மாநகராட்சி ஆணையா் ஆனந்த்மோகன் , மாநகராட்சி பொறியாளா் பாலசுப்பிரமணியம், நிா்வாக அலுவலா் ராம்மோகன்,

மண்டல தலைவா் ஜவஹா், மாமன்ற உறுப்பினா் அமலசெல்வன், ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவா் சரவணன், சுகாதார ஆய்வாளா் மாதவன் பிள்ளை, திமுக மாநகர செயலா் ஆனந்த்,

பகுதி செயலா் சேக் மீரான் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments