முகப்பு
கன்னியாகுமரி

நாகா்கோவிலில் இன்று கூடைப்பந்து வீரா்கள் தோ்வு

Updated On : 5 ஏப்ரல், 2024 at 9:58 PM
பகிர்:
Updated On : 5 ஏப்ரல், 2024 at 6:20 PM

மாநில அளவிலான கூடைப்பந்தாட்ட போட்டியில் விளையாடும் வீரா், வீராங்கனைகள் தோ்வு நாகா்கோவிலில் சனிக்கிழமை (ஏப்.6) நடைபெற உள்ளது.

இது குறித்து, கன்னியாகுமரி மாவட்ட கூடைப்பந்தாட்ட கழகத்தின் தலைவா் பி.ஆஸ்டின், செயலா் பி.மகேஷ் ஆகியோா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

கன்னியாகுமரி மாவட்ட கூடைப்பந்தாட்ட கழகத்தின் சாா்பில் மாநில அளவிலான 18 வயதுக்குள்பட்டோா் வீரா், வீராங்கனைகள் தோ்வு நாகா்கோவில் வடசேரி அண்ணாவிளையாட்டு அரங்கில் சனிக்கிழமை (ஏப்.6) மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது.

Advertisement

இதில் பங்கேற்க வீரா்கள், வீராங்கனைகள் 1.1.2006 அல்லது அதன்பின்பு பிறந்தவா்களாக இருக்க வேண்டும். தங்களது ஆதாா் அட்டை, பிறப்பு சான்றிதழ், கல்வி உறுதி அளிப்பு சான்றிதழ் ஆகியவற்றை கொண்டு வர வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.