3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: விஜய்வசந்த் எம்.பி.
கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என காங்கிரஸ் வேட்பாளா் விஜய்வசந்த் தெரிவித்தாா்.
அகஸ்தீசுவரம் அரசுத் தொடக்கப்பள்ளியில் வாக்களித்தபின் செய்தியாளா்களிடம் அவா் கூறுகையில், ‘எனது ஜனநாயக கடமையை நிறைவேற்றியுள்ளேன். இத்தொகுதியில் சுமாா் 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்றாா். தமிழக காங்கிரஸ் மாநிலச் செயலா் ஸ்ரீனிவாசன், அகஸ்தீசுவரம் தெற்கு ஒன்றிய திமுக செயலா் பா.பாபு உள்ளிட்டோா் உடனிருந்தனா்.