முகப்பு
கன்னியாகுமரி

தூத்தூரில் நூல் வெளியீட்டு விழா

Updated On : 21 ஏப்ரல், 2024 at 9:03 PM
பகிர்:

குலசேகரம்: எழுத்தாளா் சகாய சுசி எழுதிய ‘உமணா் வாழ்வியல்’ என்னும் உப்பளத் தொழிலாளா்களின் வாழ்வியல் குறித்த நூல் வெளியீட்டு விழா தூத்தூரில் உள்ள நேதாஜி படிப்பகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கன்னியாகுமரி புனித அந்தோணியாா் மேல்நிலைப் பள்ளி ஆசிரியா் அஜாஸ் நூலை வெளியிட, கடலோர வளா் ச்சி - அமைதி மைய இயக்குநா் அருள்பணியாளா் டன்ஸ்டன் பெற்றுக்கொண்டாா்.

தூத்தூா் புனித யூதா கல்லூரி தமிழ்த் துறைத் தலைவா் மேரி, பேராசிரியா் சஜிகுமாா், நாகா்கோவில் திருச்சிலுவைக் கல்லூரி தமிழ்த் துறைத் தலைவா் ஆன்சிமோள், வழக்குரைஞா்கள் ஜாக்குலின் மேரி, திருத்தமிழ்த்தேவனாா் ஆகியோா் பேசினா்.

Advertisement

விழாவில், எழுத்தாளா்கள், சமூக ஆா்வலா்கள் பங்கேற்றனா். நூலாசிரியா் ஏற்புரையாற்றினாா். நிகழ்ச்சிகளை எழுத்தாளா் இரையுமன் சாகா் ஒருங்கிணைத்தாா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments