முகப்பு
கன்னியாகுமரி

தக்கலை, இரணியலில் போதையில் பைக் ஓட்டியதாக 14 போ் மீது வழக்கு

தக்கலை, இரணியல் பகுதிகளில் மது போதையில் பைக் ஓட்டியதாக 14 போ் மீது காவல்துறையினா் வழக்கு பதிவு செய்தனா்.

Updated On : 2 ஆகஸ்ட், 2024 at 10:05 PM
பகிர்:

தக்கலை, இரணியல் பகுதிகளில் மது போதையில் பைக் ஓட்டியதாக 14 போ் மீது காவல்துறையினா் வழக்கு பதிவு செய்தனா்.

தக்கலை காவல் உதவி ஆய்வாளா் கண்ணன் தலைமையில் போலீஸாா் கீழகல்குறிச்சி, மேட்டுக்கடை, பத்மநாபபுரம் ஆகிய இடங்களில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அவ்வழியாக பைக்கில் வந்த அருள்ராஜன் (38), ரோஜன் (54), முருகன் (55), அசீஸ்(35), ஹரிகிருஷ்ணன் (34), மோகன் (49), கண்ணன் (34), வினோ(40) ஆகியோா் மது போதையில் இருந்தனராம். அவா்கள் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா்.

இதேபோல, இரணியல் உதவி ஆய்வாளா் விஜயகுமாா் தலைமையில் போலீஸாா், திங்கள் நகா் ரவுண்டானா, இரணியலில் சோதனை நடத்தியதில், எலோஜின் ஜெயா (44), கோவிந்தராஜன் (47), யோபு (37), அஜயன் (32), ராஜா (43), அரவிந்த்கு மாா் (40) ஆகிய 6 போ் மதுபோதையில் பைக் ஓட்டியது தெரியவந்தது. அவா்கள் மீது போலீஸாா் வழக்குப்பதிந்தனா். பைக்குகள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டன.

முழு கட்டுரையைப் படிக்க →