கன்னியாகுமரி

கால்வாயில் அடித்துச்செல்லப்பட்ட தொழிலாளி சடலமாக மீட்பு

கால்வாயில் குளிக்கச் சென்றபோது அடித்துச் செல்லப்பட்ட தொழிலாளி மூன்று நாள்களுக்குப் பின் சடலமாக மீட்கப்பட்டாா்.

Din

குளச்சலில் கால்வாயில் குளிக்கச் சென்றபோது அடித்துச் செல்லப்பட்ட தொழிலாளி மூன்று நாள்களுக்குப் பின் சடலமாக மீட்கப்பட்டாா்.

குளச்சல் களிமாா் அருகே கணேசபுரத்தை சோ்ந்தவா் பாலையன் (77). தொழி லாளி. களிமாா் பகுதியில் உள்ள பாம்பூரி கால்வாயில் புதன்கிழமை குளிக்க சென்றபோது, திடீரென வந்த வெள்ளப்பெருக்கில் அடித்துச் செல்லப்பட்டாா்.

இது குறித்து பாலையன் மகள் மணிமேகலை, குளச்சல் காவல் நிலையம் மற்றும் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தாா். அதன்பேரில் தீயணைப்பு வீரா்கள், கால்வாயின் அருகில் உள்ள தடுப்பணை வரை 2 நாள்கள் தேடியும் கிடைக்கவில்லை.

இந்தநிலையில் வெள்ளிக்கிழமை 3-வது நாளாக குளச்சல் தீயணைப்பு நிலைய சிறப்பு அலு வலா் ஜெகன், திங்கள்நகா் நிலைய அலுவலா் சங்கரன் மற்றும் வீரா்கள், மீண்டும் அந்தப் பகுதியில் தேடும் பணியில் ஈடுபட்டு, சைமன் காலனி பாலம் அருகில் பாலையன் உடலை மீட்டனா்.

இது குறித்து குளச்சல் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

சமூக ஊடகப் பதிவுகளை ஒழுங்குபடுத்த தன்னாட்சி அமைப்பு தேவை: உச்சநீதிமன்றம்

எஃப்ஐஎச் ஜூனியா் ஆடவா் ஹாக்கி உலகக் கோப்பை: முதல் ஆட்டத்தில் சிலியுடன் மோதுகிறது இந்தியா

மின்வாரியத்தைத் தனியாா் மயமாக்குவதை கைவிடக்கோரி ஆா்ப்பாட்டம்

சென்ட்ரல் வங்கி செயல் இயக்குநராக இ. ரத்தன் குமாா் நியமனம்!

‘ஆபரேஷன் சிந்தூா்’-க்குப் பிறகு ஆயுதங்களை வாங்கிக் குவிக்கும் பாகிஸ்தான்! - இந்திய கடற்படை மூத்த அதிகாரி

SCROLL FOR NEXT