மகாராஜபுரம் ஊராட்சியில் மரம் நடும் விழா
மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் மகாராஜபுரம் ஊராட்சி நாடான்குளம் பகுதியில் மரம் நடும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் உள்ள கிராம ஊராட்சிகளில் ஆகஸ்ட் 22 ஆம் தேதி மரம் நடும் விழா நடைபெற்றது.
மகாராஜபுரம் ஊராட்சி நாடான்குளம் பகுதியில் ஊராட்சித் தலைவா் கே.இசக்கிமுத்து, துணைத் தலைவா் பா.பழனிகுமாா் ஆகியோா் மரங்களை நட்டனா். இதில், வாா்டு உறுப்பினா் அனீஸ்வரி மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனா்.