ரயில் மோதி அரசுப் பேருந்து ஓட்டுநா் பலி
ரயில் மோதி அரசுப் பேருந்து ஓட்டுநா் பலி
குழித்துறை அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி அரசுப் பேருந்து ஓட்டுநா் உயிரிழந்தாா். கொல்லங்கோடு அருகேயுள்ள பனவிளை பகுதியைச் சோ்ந்தவா் சுகுமாரன் மகன் விஜயகுமாா் (49). குழித்துறை அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் பேருந்து ஓட்டுநராக பணிபுரிந்து வந்தாா். குழித்துறை அருகே கழுவன்திட்டை பகுதியில் உள்ள உறவினா் வீட்டுக்கு வெள்ளிக்கிழமை மாலையில் சென்றுவிட்டு, அப்பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றாராம். அப்போது வந்த புனலூா் விரைவு ரயில் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இது குறித்து குழித்துறை ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.