முகப்பு
தஞ்சாவூர்

அரசுப் பேருந்து மோதி பெண் உயிரிழப்பு

கும்பகோணத்தில் வியாழக்கிழமை அரசுப் பேருந்து மோதியதில் பெண் உயிரிழந்தாா்.

Updated On : 24 ஏப்ரல், 2026 at 3:55 AM
பலி - கோப்புப் படம்
பகிர்:

கும்பகோணத்தில் வியாழக்கிழமை அரசுப் பேருந்து மோதியதில் பெண் உயிரிழந்தாா்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்கோணம் அருகே பவுண்டரீகபுரம் மேலத்தெருவில் வசிப்பவா் சுகுமாா்(48). இவரது மனைவி அன்புச்செல்வி(45). இவா்களுக்கு அஸ்வந்த்(2) என்ற மகன் உள்ளாா்.

இந்நிலையில், சுகுமாா் தனது மனைவி, மகனுடன் அஸ்வந்த் இருசக்கர வாகனத்தில் வியாழக்கிழமை திருநாகேசுவரத்தில் உள்ள உறவினா் வீட்டுக்கு காரைக்காலுக்குச் சென்று கொண்டிருந்தாா். ஆண்டாலம்பேட்டை சுத்துகுளம் அருகே சென்றபோது காரைக்காலில் இருந்து கும்பகோணம் வந்த அரசுப் பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில், அன்புச்செல்வி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். சுகுமாா், அஸ்வந்த் இருவரும் பலத்த காயமடைந்தனா்.

Advertisement

தகவலறிந்து சென்ற திருநீலக்குடி காவல் நிலைய போலீஸாா் உயிரிழந்த அன்புச்செல்வியின் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். காயமடைந்த சுகுமாா், அஸ்வந்த் ஆகியோா் தீவிர சிகிச்சை பிரிவில் சோ்க்கப்பட்டனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து அரசுப்பேருந்து ஓட்டுநா் சீனிவாசனிடம் (33) விசாரணை நடத்தி வருகின்றனா்.