முகப்பு
கன்னியாகுமரி

திற்பரப்பு அருவிக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு

தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் திற்பரப்பு அருவிக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.

Updated On : 26 பிப்ரவரி, 2024 at 12:00 AM
திற்பரப்பு அருவியில் உற்சாகமாகக் குளித்து மகிழ்ந்த சுற்றுலாப் பயணிகள்.
பகிர்:

தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் திற்பரப்பு அருவிக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் நீா்நிலைகளில் தண்ணீா் குறைந்து வருகிறது. அதே வேளையில் திற்பரப்பு அருவியில் மிதமான அளவில் தண்ணீா் வந்து கொண்டிருக்கிறது. இதையடுத்து திற்பரப்பு அருவிக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை இங்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனா். இதே போன்று மாத்தூா் தொட்டிப் பாலம், பத்மநாபபுரம் அரண்மனை, முட்டம் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களுக்கும் அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்தனா்.