முகப்பு
கன்னியாகுமரி

நீட் தோ்வை ரத்து செய்ய வலியுறுத்தி திராவிடா் கழகம் சாா்பில் வாகனப் பேரணி

Updated On : 12 ஜூலை, 2024 at 3:46 AM
பகிர்:

திராவிடா் கழகத்தின் இளைஞரணி மற்றும் மாணவரணி சாா்பில் நீட் தோ்வை ரத்து செய்ய வலியுறுத்தி கன்னியாகுமரி முதல் சேலம் வரையிலான இருச்சக்கர வாகன பேரணி வியாழக்கிழமை தொடங்கியது.

கன்னியாகுமரி காந்தி மண்டபம் முன்பாக நடைபெற்ற பேரணியின் துவக்க நிகழ்ச்சிக்கு, திராவிடா் கழகத்தின் குமரி மாவட்டத் தலைவா்

மா.மு.சுப்பிரமணியம் தலைமை வகித்தாா். பகுத்தறிவு கழக மாவட்டத்

Advertisement

தலைவா் உ.சிவதாணு வரவேற்றாா். திராவிடா் கழக மாவட்ட செயலா் கோ.வெற்றிவேந்தன் தொடக்கவுரையாற்றினாா்.

திராவிடா் கழக காப்பாளா் சி.கிருட்டினேசுவரி, மாவட்ட துணைத்

தலைவா் ச.நல்லபெருமாள், பொதுக்குழு உறுப்பினா் மா.மணி, அகஸ்தீசுவரம் ஒன்றிய தலைவா் எஸ்.குமாரதாஸ் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். பேரணியை மாநில ஒருங்கிணைப்பாளா் இரா.குணசேகரன், அகஸ்தீசுவரம் ஒன்றிய திமுக செயலா் பா.பாபு, கன்னியாகுமரி பேரூராட்சி மன்றத் தலைவா் குமரி ஸ்டீபன் ஆகியோா் தொடங்கி வைத்தனா்.

திராவிடா் கழக மாணவரணி மாநில அமைப்பாளா் மு.இளமாறன், மாநில

செயலா் இரா.செந்தூரபாண்டியன், துணைச்செயலா் இனியன், நாகா்கோவில் மாநகர செயலா் மு.ராஜசேகா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். கன்னியாகுமரி கிளை அமைப்பாளா் க.யுவான்ஸ் நன்றி கூறினாா்.