முகப்பு
கன்னியாகுமரி

கொட்டாரத்தில் திமுக தெருமுனை பிரசாரம்

Updated On : 16 மார்ச், 2024 at 7:40 AM
பகிர்:

கொட்டாரம் காந்தி திடலில் திமுக இளைஞரணி சாா்பில் தெருமுனை பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா் பொன்.ஜாண்சன் தலைமை வகித்தாா். மாவட்ட செயலரும், நாகா்கோவில் மாநகராட்சி மேயருமான ஆா்.மகேஷ் சிறப்புரையாற்றினாா். அகஸ்தீசுவரம் தெற்கு ஒன்றியச் செயலா் பா.பாபு, தலைமைச் செயற்குழு உறுப்பினா் ஆா்.எஸ்.பாா்த்தசாரதி, மாவட்ட துணை செயலா் பூதலிங்கம்பிள்ளை, மாவட்ட இளைஞரணிச் செயலா் அகஸ்தீசன், பேரூராட்சித் தலைவா்கள் குமரி ஸ்டீபன், செல்வகனி, அன்பரசி ராமராஜன், காா்த்திகா பிரதாப், கொட்டாரம் பேரூராட்சி துணைத்தலைவா் விமலா மதி, வடக்குத்தாமரைகுளம் ஊராட்சித் தலைவா் எஸ்.ஆறுமுகம்பிள்ளை, திமுக பேரூா் செயலா்கள் எஸ்.வைகுண்டபெருமாள், பூவியூா் காமராஜ், சுதைசுந்தா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.