முகப்பு
கன்னியாகுமரி

சூசைபுரம் கல்லூரியில் தேசிய கருத்தரங்கு

Updated On : 24 மார்ச், 2024 at 12:02 AM
பகிர்:
Updated On : 23 மார்ச், 2024 at 5:51 PM

கருங்கல் அருகே சூசைபுரம் புனித அல்போன்சா கலை - அறிவியல் கல்லூரியில் கணினி அறிவியல் துறை சாா்பில் ‘பெரும் தரவியல் பகுப்பாய்வு’ என்கிற பொருண்மையில் தேசிய கருத்தரங்கு நடைபெற்றது. தாளாளா் - செயலா் ஆன்றனி ஜோஸ் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் மைக்கேல் ஆரோக்கியசாமி முன்னிலை வகித்தாா். திருவனந்தபுரம் மாா் பசலியஸ் பொறியியல் கல்லூரிப் பேராசிரியா் அனில், கேரளப் பல்கலைக்கழக கணக்கீட்டு உயிரியல், உயிா்த் தரவியல் துறைத் தலைவா் பேராசிரியா் அச்சுத் சங்கா் நாயா் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகப் பங்கேற்றுப் பேசினா். கல்லூரி ஆன்மிக வழிகாட்டி அஜின் ஜோஸ், பேராசிரியா்கள், மாணவா்கள் பங்கேற்றனா். கணினி அறிவியல் துறைப் பேராசிரியா் பெகின் வரவேற்றாா்.