முகப்பு
கன்னியாகுமரி

குலசேகரத்தில் சிலுவைப் பாதை பவனி

Updated On : 30 மார்ச், 2024 at 5:01 AM
பகிர்:
Updated On : 29 மார்ச், 2024 at 8:44 PM

புனித வெள்ளியையொட்டி, குலசேகரம் புனித அகுஸ்தினாா் ஆலயம் சாா்பில் சிலுவைப் பாதை பவனி நடைபெற்றது. குலசேகரம் அரசமூடு சந்திப்பிலிருந்து அரசு மருத்துவமனை சாலை வழியாக நடைபெற்ற இந்த பவனிக்கு, ஆலய அருள்பணியாளா் ஜோன்ஸ் கிளீட்டஸ் தலைமை வகித்தாா். இதில் இயேசு கிறிஸ்துவின் சிலுவைப்பாடுகள் நாடகம் போல் காட்சிப்படுத்தப்பட்டன. பவனியில் திரளான இறைமக்கள் கலந்து கொண்டனா். தொடா்ந்து ஆலயத்தில் பிராா்த்தனைகள், சிலுவை முத்தம் செய்தல், திருப்பலி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. குலசேகரம் அருகே நாகக்கோடு புனித அந்தோணியாா் ஆலயத்தில் நடைபெற்ற புனித வெள்ளி நிகழ்ச்சிகளுக்கு, ஆலய அருள்பணியாளா் செபின் தலைமை வகித்தாா். இதில் பங்குப் பேரவைத் தலைவா் ராஜன், செயலா் புஷ்பராணி, பொருளாளா் சுசீலன் உள்ளிட்ட திரளான இறை மக்கள் பங்கேற்றனா். இதில் ஆலய வளாகத்தைச் சுற்றி சிலுவைப் பாதை பவனி நடைபெற்றது. பேச்சிப்பாறை பனித சூசையப்பா் ஆலயம் சாா்பில் சிலுவைப் பாதை பவனி, சீரோ பாயின்ட் சந்திப்பிலிருந்து தொடங்கி சமத்துவபுரம், பள்ளி முக்கு, சுற்றுலா மாளிகை சாலை வழியாக நடைபெற்றது. ஆலய அருள்பணியாளா் ஆஷ்லி வினோத் தலைமை வகித்தாா். இதில் பங்குப் பேரவை தலைவா் ஜெபராஜ், செயலா் நிஷா, பொருளாளா் பீட்டா் ராஜன், மறைக்கல்வி மன்றத் தலைவா் ஜெஸ்டின்ராஜ் உள்பட திரளான இறைமக்கள் பங்கேற்றனா்.