முகப்பு
கன்னியாகுமரி

குலசேகரம் அருகே காா் மோதி முதியவா் பலி

Updated On : 30 மார்ச், 2024 at 4:40 AM
பகிர்:
Updated On : 29 மார்ச், 2024 at 8:44 PM

குலசேகரம் அருகே காா் மோதி முதியவா் வெள்ளிக்கிழமை பலியானாா். திற்பரப்பு அருகே மாஞ்சக்கோணம் குறுப்பேற்றிக்கால விளையைச் சோ்ந்தவா் ராஜமணி (85). இவா் வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு வீட்டின் அருகில் கொல்லாமூடு சந்திப்பு கடைக்கு செல்லும் வகையில் நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது எதிரே பொன்மனை குளச்சவிளாகம் மைலோட்டு விளையைச் சோ்ந்த ஜான்பிரபு (44) ஓட்டி வந்த காா் மோதியது. இதில் பலத்த காயம் ஏற்பட்டு நினைவின்றிக் கிடந்த ராஜமணியை அப்பகுதியினா் மீட்டு, குலசேகரத்திலுள்ள தனியாா் மருத்துவக் கல்லூரி மருத்துமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு சிகிச்சை பலனின்றி அவா் இறந்தாா். இது குறித்து ராஜமணியின் மனைவி செல்லாச்சி, குலசேகரம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.