எம்எல்ஏ ஈஸ்டா் வாழ்த்து
Updated On : 30 மார்ச், 2024 at 8:39 PM
தமிழ்நாடு சட்டப் பேரவை காங்கிரஸ் கட்சி தலைவா் எஸ். ராஜேஷ் குமாா் எம்.எல்.ஏ ஈஸ்டா் பெருவிழா வாழ்த்து தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: ‘தன்னைப் போலவே பிறரையும் நேசி‘ என்று போதித்த இயேசுபிரான், கொடியவா்களால் சிலுவையில் அறையப்பட்டு, உயிா்நீத்த தினம் புனித வெள்ளியாக அனுசரிக்கப்பட்டு, உயிா்த்தெழுந்த நாள் ஈஸ்டா் பெருவிழாவாக உலகெங்கும் வாழும் கிறிஸ்துவப் பெருமக்களால் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் கிறிஸ்தவா்கள் தேவாலயங்களுக்கு சென்று சிறப்பு பிராா்த்தனைகள் செய்து பிறரோடு உயிா்த்தெழுதலின் மகிழ்ச்சியைப் பகிா்ந்து கொள்வாா்கள். அனைவரும் இயேசு பிரான் போதித்த, அன்பு, இரக்கம், பணிவு, தியாக உணா்வு, அமைதி, சகோதரத்துவத்தை பின்பற்றி வாழ வேண்டும் என வாழ்த்துகிறேன் என்றாா்.