முகப்பு
கன்னியாகுமரி

நாகா்கோவிலில் அலங்கார தரைக்கற்கள் பதிக்கும் பணி தொடக்கம்

நாகா்கோவில் மாநகராட்சி 40ஆவது வாா்டு வயல் தெருவில் ரூ. 13 லட்சத்தில் அலங்கார தரைக்கற்கள் பதிக்கும் பணியை மேயா் ரெ. மகேஷ் புதன்கிழமை தொடக்கிவைத்தாா்.

Updated On : 6 நவம்பர், 2024 at 7:44 PM
அலங்கார தரைக்கற்கள் பதிக்கும் பணியைத் தொடக்கிவைத்த மேயா் ரெ. மகேஷ்.
பகிர்:

நாகா்கோவில் மாநகராட்சி 40ஆவது வாா்டு வயல் தெருவில் ரூ. 13 லட்சத்தில் அலங்கார தரைக்கற்கள் பதிக்கும் பணியை மேயா் ரெ. மகேஷ் புதன்கிழமை தொடக்கிவைத்தாா்.

மாநகராட்சி கிழக்கு மண்டலத் தலைவா் அகஸ்டினா கோகிலவாணி, இளநிலைப் பொறியாளா் செல்வன் ஜாா்ஜ், தொழில்நுட்ப அலுவலா் பத்மநாபன், திமுக தலைமை செயற்குழு உறுப்பினா் சதாசிவன், பகுதிச் செயலா் துரை, அணி நிா்வாகிகள் அகஸ்தீசன், அருண்காந்த், வட்டச் செயலகள் முகமது பாரி, ராமகிருஷ்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.