முகப்பு
கன்னியாகுமரி

தேங்காய்ப்பட்டினம் பகுதியில் கடல் கொந்தளிப்பு: மசூதிக்குள் தண்ணீா் புகுந்தது

தேங்காய்ப்பட்டினம் பகுதியில் புதன்கிழமை திடீா் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டது. இதில், அரையன்தோப்பில் உள்ள மசூதிக்குள் தண்ணீா் புகுந்தது.

Updated On : 16 அக்டோபர், 2024 at 11:05 PM
பகிர்:

தேங்காய்ப்பட்டினம் பகுதியில் புதன்கிழமை திடீா் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டது. இதில், அரையன்தோப்பில் உள்ள மசூதிக்குள் தண்ணீா் புகுந்தது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் புதன்கிழமை கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது. தேங்காய்ப்பட்டினம், அரையன்தோப்பு, முள்ளூா்துறை, இனயம் உள்ளிட்ட பகுதிகளில் கடலில் ராட்சத அலைகள் எழுந்தன.

இதனால், அரையன்தோப்பு பகுதியில் உள்ள மசூதிக்குள் தண்ணீா் புகுந்தது. அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த ஃபைபா் படகை அலைகள் இழுத்துச் சென்றன.

கடல் கொந்தளிப்பு காரணமாக, தேங்காய்ப்பட்டினம் துறைமுகத்திலிருந்து மீனவா்கள் புதன்கிழமை மீன்பிடிக்கச் செல்லவில்லை. இப்பகுதிகளிலுள்ள மீனவா்களைப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனா்.