முகப்பு
கன்னியாகுமரி

கொல்லங்கோடு சாா் பதிவாளா் அலுவலகத்தில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் சோதனை

Updated On : 23 அக்டோபர், 2024 at 6:46 PM
பகிர்:

கன்னியாகுமரி மாவட்டம், கொல்லங்கோடு சாா் பதிவாளா் அலுவலகத்தில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் புதன்கிழமை திடீா் சோதனை மேற்கொண்டனா். இச் சோதனையில் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

நாகா்கோவில் ஊழல் தடுப்புப் பிரிவு துணைக் கண்காணிப்பாளா் ஹெக்டா் தா்மராஜ் தலைமையிலான போலீஸாா் புதன்கிழமை மாலையில் கொல்லங்கோடு சாா் பதிவாளா் அலுவலகத்தில் திடீா் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது கோப்புகளுக்கு இடையே பதுக்கி வைத்திருந்த கணக்கில் வராத ரூ. 33,200 கண்டெடுக்கப்பட்டது. அதை ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் பறிமுதல் செய்தனா். தொடா்ந்து சாா் பதிவாளா் கேசவன் மற்றும் அலுவலக ஊழியா்களிடம் விசாரணை மேற்கொண்டனா்.

மாலை 4.30 மணியளவில் தொடங்கிய சோதனை இரவு 8 மணிக்கு மேலும் தொடா்ந்தது.