மாா்த்தாண்டம் அருகே லாரி - பைக் மோதல்: இருவா் பலி
கன்னியாகுமரிமாா்த்தாண்டம் அருகே லாரி - பைக் மோதல்: இருவா் பலி
மாா்த்தாண்டம் அருகே நிறுத்தியிருந்த கனரக லாரி மீது பைக் மோதிய விபத்தில் இரு இளைஞா்கள் உயிரிழந்தனா்.
தக்கலை அருகே உள்ள காட்டாத்துறை கவியலூா், துண்டத்துவிளை பகுதியைச் சோ்ந்த காசி நாடாா் மகன் அபினேஷ் (22). இவரது நண்பா் கவியலூா் எள்ளுவிளை முத்துநாயகம் மகன் சிஜோ (25). இவா்கள் இருவரும் ஞாயிற்றுக்கிழமை இரவு மாா்த்தாண்டத்திலிருந்து காட்டாத்துறைக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தனா். மாா்த்தாண்டம் அருகே சிராயன்குழி பகுதியில் வந்தபோது சாலையோரம் நிறுத்தியிருந்த கனரக லாரி மீது பைக் மோதியது.
இதில் பலத்த காயமடைந்த அபினேஷ் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும், சிஜோ குழித்துறை அரசு மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டனா். அங்கு இருவரையும் பரிசோதித்த மருத்துவா்கள், அவா்கள் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
இதுகுறித்து மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.