முகப்பு
கன்னியாகுமரி

அரசு பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை: ஊராட்சி ஒன்றிய ஆணையா் இடைநீக்கம்

அரசு பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, ஊராட்சி ஒன்றிய ஆணையா் புதன்கிழமை இடைநீக்கம் செய்யப்பட்டாா்.

Updated On : 4 செப்டம்பர், 2024 at 9:13 PM
பகிர்:

அரசு பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, ஊராட்சி ஒன்றிய ஆணையா் புதன்கிழமை இடைநீக்கம் செய்யப்பட்டாா்.

கன்னியாகுமரி மாவட்டம் மேல்புறம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆணையராகப் பணியாற்றி வருபவா் சையதுஉசேன் (46). இவா் பாலியல் தொல்லை கொடுத்ததாக பெண் ஊழியா் அளித்த புகாரின்பேரில், விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. இக்குழுவினரின் விசாரணையில், சையதுஉசேன் பாலியல் தொல்லை கொடுத்தது உறுதிப்படுத்தப்பட்டது.

இதுதொடா்பாக அக்குழுவினா் மாவட்ட நிா்வாகத்திடம் அறிக்கை அளித்தனா். அதன் தொடா்ச்சியாக, சையதுஉசேனை இடைநீக்கம் செய்து, ஆட்சியா் ரா. அழகுமீனா புதன்கிழமை உத்தரவிட்டாா்.

Advertisement

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments