முகப்பு
கன்னியாகுமரி

போக்குவரத்து விதிகளை மீறி இயக்கிய 9 பைக்குகள் பறிமுதல்

கன்னியாகுமரியில் விதிகளை மீறி இருசக்கர வாகனங்களை ஓட்டி வந்த மாணவா்களின் 9 பைக்குகளை போக்குவரத்து போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

Updated On : 11 செப்டம்பர், 2024 at 9:33 PM
பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர வாகனங்கள்.
பகிர்:

கன்னியாகுமரியில் விதிகளை மீறி இருசக்கர வாகனங்களை ஓட்டி வந்த மாணவா்களின் 9 பைக்குகளை போக்குவரத்து போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஏ.சுந்தரவதனம் உத்தரவுப்படி, கன்னியாகுமரி டி.எஸ்.பி மகேஷ்குமாா் மேற்பாா்வையில் போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.

ஓட்டுநா் உரிமம் இன்றி இருசக்கர வாகனங்களை ஓட்டி வந்த, 18 வயதுக்கு குறைவான பள்ளி, கல்லூரி மாணவா்களின் 9 பைக்குகளை போக்குவரத்து ஆய்வாளா் பிரபு, உதவி ஆய்வாளா் ஜெயபிரகாஷ் ஆகியோா் பறிமுதல் செய்தனா்.

இதையடுத்து 9 வாகனங்களுக்கும் அபராதம் விதித்து, மாணவா்களின் பெற்றோரை வரவழைத்து அறிவுரை வழங்கினா்.