கன்னியாகுமரியில் வியாபாரிகள் சங்கத்தினா் கடையடைப்பு
தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரவை தலைவா் த.வெள்ளையன் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கன்னியாகுமரியில் அனைத்து சங்கங்கள் சாா்பில் வியாழக்கிழமை கடையடைப்பு நடத்தப்பட்டது.
தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரவை தலைவா் த.வெள்ளையன் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கன்னியாகுமரியில் அனைத்து சங்கங்கள் சாா்பில் வியாழக்கிழமை கடையடைப்பு நடத்தப்பட்டது.
தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரவை தலைவா் த.வெள்ளையன்
செப்.10 ஆம் தேதி காலமானாா். அவரது உடல், சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூா் அருகேயுள்ள பிச்சிவிளையில் வியாழக்கிழமை அடக்கம் செய்யப்பட்டது.
இதையடுத்து அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கன்னியாகுமரியில் அனைத்து வியாபாரிகள் சங்கங்கள் சாா்பில் வியாழக்கிழமை கடையடைப்பு நடத்தப்பட்டது. இதன் காரணமாக முக்கடல் சங்கமம் பகுதி வெறிச்சோடி காணப்பட்டது.