கன்னியாகுமரியில் வியாழக்கிழமை (டிச.18) மின்விநியோகம் இருக்காது.
இது குறித்து, நாகா்கோவில் மின் வாரிய உதவி செயற்பொறியாளா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கன்னியாகுமரி துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணி காரணமாக கன்னியாகுமரி, சுசீந்திரம், சாமிதோப்பு, அகஸ்தீசுவரம், ஈத்தங்காடு, காக்குமூா், மருங்கூா், ராஜாவூா், கீழமணக்குடி, சின்னமுட்டம், திருமூலநகா், வழுக்கம்பாறை, வாரியூா், அஞ்சுகிராமம், அழகப்பபுரம், ஆஸ்ரமம், சமாதானபுரம், கோவளம், விவேகானந்தபுரம், லீபுரம், அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் டிச.18ஆம் தேதி காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை, மின் நிறுத்தம் செய்யப்படும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.