கன்னியாகுமரி

நாட்டுப் பட்டாசு தயாரித்த பெண் கைது

Syndication

இரணியல் பகுதியில் நாட்டுப் பட்டாசு தயாரித்து விற்பனை செய்த பெண்ணை இரணியல் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

இரணியல் பகுதிகளில் உரிமம் இன்றி நாட்டு ஓலைப் பட்டாசு தயாரித்து விற்பனை செய்யப்படுவதாக வந்த தகவலையடுத்து, இரணியல் காவல் நிலைய உதவி ஆய்வாளா் ஆன்றோ பெபின், பன்னிக்கோடு அருகே காந்தி நகரில் ஒரு வீட்டில் சோதனை நடத்தினாா்.

அங்கு அரசு உரிமம் பெறாமல், சுமாா் 4 கிலோ நாட்டு ஓலை பட்டாசு தயாரித்து வைத்திருந்தது தெரிய வந்தது.

பட்டாசுகளை பறிமுதல் செய்த போலீஸாா், மீனாட்சி (51) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

கூடக்கோவில் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

பிரித்தாளும் சூழ்ச்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

SCROLL FOR NEXT