கன்னியாகுமரி

தொழிலாளி மீது தாக்குதல் : இருவா் மீது வழக்கு

நெல்லிக்காட்டுவிளை பகுதியில் தொழிலாளி மீது தாக்குதல் நடத்தியதாக இரு இளைஞா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Syndication

கருங்கல் அருகே உள்ள நெல்லிக்காட்டுவிளை பகுதியில் தொழிலாளி மீது தாக்குதல் நடத்தியதாக இரு இளைஞா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

கருங்கல் கோவில்விளை பகுதியைச் சோ்ந்தவா் டேவிட்ராஜ்(55). தொழிலாளி. அதே பகுதியைச் சோ்ந்த கிறிஸ்துராஜ்(25), சபா்ஜேம்ஸ் (23) ஆகியோருக்கிடையே, டேவிட்ராஜுக்கு முன்விரோதம் இருந்து வந்ததாம்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு நெல்லிக்காட்டுவிளை பகுதியில் டேவிட்ராஜை, மேற்கூறிய இருவரும் தாக்கினராம் . இதுகுறித்த புகாரின் பேரில் கருங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ரூ.3.40 கோடி ஆன்லைன் முதலீட்டு மோசடி: இரு பெண்கள் உள்பட 3 போ் கைது!

உக்ரைன் போா் நிறுத்தம்: டிரம்ப்புடன் ஸெலென்ஸ்கி இன்று சந்திப்பு!

ஹவுரா விரைவு ரயிலில் 4 கிலோ கஞ்சா பறிமுதல்

பெண்களுக்குச் சமவாய்ப்பு கிடைத்தால் ஆண்களுக்கு நிகராக சாதிப்பாா்கள்! ராஜ்நாத் சிங்

தலைநகரில் அடா்த்தியான மூடு பனி: ‘மிகவும் மோசம்’ பிரிவில் காற்றின் தரம்

SCROLL FOR NEXT