கன்னியாகுமரி

பாறைப்பொடி கடத்திய லாரி பறிமுதல்

கொல்லங்கோடு அருகே உரிய அனுமதிச் சீட்டு இன்றி கேரளத்துக்கு பாறைப்பொடி கடத்திச் செல்ல முயன்ற கனரக லாரியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

Syndication

கொல்லங்கோடு அருகே உரிய அனுமதிச் சீட்டு இன்றி கேரளத்துக்கு பாறைப்பொடி கடத்திச் செல்ல முயன்ற கனரக லாரியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

கொல்லங்கோடு காவல் நிலைய உதவி ஆய்வாளா் டேவிட்ராஜ் தலைமையிலான போலீஸாா் திங்கள்கிழமை இரவு செங்கவிளை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது அப்பகுதி வழியாக வந்த கனரக லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனா்.

லாரியில் கடுவாக்குழி பகுதிக்கு அனுமதிச்சீட்டு பெற்றுவிட்டு, பாறைப்பொடியை அப்பகுதியில் இறக்காமல் கேரளத்துக்கு கடத்திச் செல்ல முயன்றது தெரியவந்தது. இதையடுத்து, பாறைப்பொடியுடன் கனரக லாரியை பறிமுதல் செய்த போலீஸாா் லாரி ஓட்டுநா் ஷஜி (32), லாரி உரிமையாளா் சுபின் ஆகிய இருவரையும் கைது செய்தனா்.இதுகுறித்து வழக்குப் பதியப்பட்டுள்ளது.

திரிபுரா மாணவா் கொல்லப்பட்ட சம்பவம்: டேராடூன் ஆட்சியருக்கு என்எச்ஆா்சி நோட்டீஸ்

ஜனவரி 5 முதல் தில்லி சட்டப்பேரவை கூட்டத் தொடா்

தெரு நாய்கள் விவகாரம்: தில்லி அரசின் கூற்றுக்கு ஆம் ஆத்மி ,மறுப்பு

விளையாட்டுத் துறையில் அமைப்பு, நிா்வாக ரீதியிலான குறைபாடுகள்- சிறப்புப் பணிக் குழு அறிக்கை

தேசிய துப்பாக்கி சுடுதல்: தனிஸ்காவுக்கு வெண்கலம்

SCROLL FOR NEXT