முகப்பு
கன்னியாகுமரி

இரணியல் ஸ்ரீ அனுக்கிரக சாய்பாபா ஆலயத்தில் வருஷாபிஷேக விழா

Updated On : 4 ஜனவரி, 2025 at 2:21 AM
விழாவில் பரதநாட்டியம் ஆடிய மாணவிகள் அட்சயா, பவித்ரா ஆகியோருக்கு சான்றிதழ் வழங்கிய தூத்துக்குடி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணைய தலைவா் திருநீலப் பிரசாத், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் துணை கண்காணிப்பாளா் சந்திரசேகரன். உடன் சுவாமி பத்மேந்திரா உள்ளிட்டோா்.
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2025 at 9:38 PM

கன்னியாகுமரி மாவட்டம், இரணியல் சாய்நகா் சீரடி ஸ்ரீ அனுக்கிரக சாய்பாபா அன்பாலயம் துவாரகாமாயி 9-ஆவது வருஷாபிஷேக விழா அண்மையில் நடைபெற்றது.

இதையொட்டி காலையில் காக்கட ஆரத்தி, மங்கல இசை, மகா கணபதி ஹோமம், கலச பூஜை, கோமாதா பூஜை, அா்ச்சனை, சுதா்சன யாகம் நடத்தப்பட்டது. யாகசாலை மற்றும் வழிபாடுகளை ஆலய தந்திரி சூரிய ஆனந்த் ஷா்மா நடத்தினாா். அறக்கட்டளை நிா்வாக இயக்குநா் மருத்துவா் கோலப்பன் தலைமை வகித்தாா். மருத்துவா் ரெஞ்சு, தலைவா் கஸ்தூரி, பொருளாளா் சிதம்பரராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஸ்ரீலஸ்ரீ ஞானயோகி ரவி தாத்தா மற்றும் குருமாதா சுபா ஆகியோா் அருளாசி வழங்கினா்.

பின்னா், மாலையில் முனைவா் சம்பத் சுப்பிரமணி சொற்பொழிவாற்றினாா். பி. எஸ்.பிரயோஷிகாவின் பரதநாட்டியம் நடைபெற்றது.

Advertisement

இரண்டாம் நாள் நிகழ்ச்சியாக சிறப்பு பூஜை நடைபெற்றது. வள்ளலாா் பேரவை மாநிலத் தலைவா் சுவாமி பத்மேந்திரா அருளாசி வழங்கி நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

சிறப்பு விருந்தினா்களாக தூத்துக்குடி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணைய தலைவா் திருநீலப்பிரசாத், கன்னியாகுமரி மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு துணை காவல் கண்காணிப்பாளா் சந்திரசேகரன், நாகா்கோவில் மாநகராட்சி உறுப்பினா் எம்.சுனில் குமாா், இரணியல் காவல் ஆய்வாளா் செந்தில்வேல் குமாா் ஆகியோா் கலந்து கொண்டனா்.

வடசேரி ஸ்ரீ ராஜராஜேஸ்வரி நாட்டியாலயா மற்றும் ஸ்ரீஅட்சயா நிருத்யாலயா மாணவிகள் அட்சயா, பவித்ராஆகியோரின் பரதநாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

விழாவில் ஏராளமான சாய் பக்தா்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா். விழா ஏற்பாடுகளை இரணியல் சீரடி சாய்பாபா குமரி அறக்கட்டளை நிா்வாகிகள் செய்திருந்தனா்.