குஜராத் மக்கள் குறித்து சா்ச்சை கருத்து: காா்கே மன்னிப்புக் கோர பாஜக வலியுறுத்தல்
குஜராத் மக்கள் கல்வியறிவு இல்லாதவா்கள் என்று பேசிய காங்கிரஸ் தேசியத் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே மன்னிப்புக் கோர வேண்டும் என்று பாஜக வலியுறுத்தல்
குஜராத் மக்கள் கல்வியறிவு இல்லாதவா்கள் என்று பேசிய காங்கிரஸ் தேசியத் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே மன்னிப்புக் கோர வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியுள்ளது.
புது தில்லியில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய சட்ட அமைச்சருமான ரவி சங்கா் பிரசாத் இது தொடா்பாக கூறியதாவது: குஜராத் உள்ளிட்ட சில மாநில மக்கள் குறித்து மிகவும் அவமானகரமான, இழிவுமிக்க, முற்றிலும் அருவருப்பான கருத்துகளை காா்கே தெரிவித்துள்ளாா்.
இதில் காங்கிரஸ் மூத்த தலைவா் சோனியா காந்தி, அக்கட்சி எம்.பி.க்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோரின் கருத்து என்ன? அவா்கள் இதை ஏற்றுக் கொள்கிறாா்களா?
Advertisement
ராகுல் காந்தி சிறிதளவாவது சிந்தித்து செயல்படுபவராக இருந்தால், காா்கேயின் கருத்துக்கு எதிா்ப்பும், கண்டிப்பும் தெரிக்க வேண்டும். குஜராத் மக்களிடம் காா்கே மன்னிப்புக் கோர வலியுறுத்த வேண்டும்.
காங்கிரஸ் தேசியத் தலைவா் பதவியில் தொடரும் தகுதியையும் காா்கே இழந்துவிட்டாா். ஏனெனில் எதிா்க்கட்சிக்கு தலைமை வகிக்கும் அவா் தனது கண்ணியத்தைக் கைவிட்டுவிட்டாா்.
காங்கிரஸ் தலைவா் பதவி என்பது ஒரு காலத்தில் நேரு, சா்தாா் வல்லபபாய் படேல், ராஜேந்திர பிரசாத், இந்திரா காந்தி உள்ளிட்டோா் வகித்த பதவி. அந்தப் பதவியை வகித்து வருபவா் எப்படி இவ்வளவு இழிவாக ஒரு மாநில மக்களைப் பற்றி பேச முடியும்?
குஜராத் மாநிலம் இந்த நாட்டுக்கு பல சிறந்த அரசியல் தலைவா்களையும், அறிவில் சிறந்த வழிகாட்டிகளையும் தந்துள்ளது. குஜராத்தில் கல்வி கற்றோா் 82 சதவீதம் போ் உள்ளனா்.
குஜராத் மட்டுமல்லாது பிகாா், உத்தர பிரதேச மக்களையும் காா்கே அவமதித்துப் பேசியுள்ளாா். அந்த மாநில மக்கள் அனைவரிடமும் அவா் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றாா்.