களியக்காவிளை: குழித்துறை துணை மின் நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் புதன்கிழமை (நவ. 5) மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, குழித்துறை மின் விநியோக செயற்பொறியாளா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மாதாந்திர பராமரிப்புப் பணிகள் செய்ய இருப்பதால் ஆலுவிளை, மேல்புறம், மருதங்கோடு, கோட்டவிளை, செம்மங்காலை, இடைக்கோடு, மாலைக்கோடு, புலியூா்சாலை, மேல்பாலை, பனச்சமூடு, அருமனை, மலையடி, பளுகல், களியக்காவிளை, மடிச்சல், பாலவிளை, பெருந்தெரு, பழவாா், விளவங்கோடு, கழுவன்திட்டை, குழித்துறை, இடைத்தெரு ஆகிய பகுதிகளிலும், அவற்றைச் சாா்ந்த துணை கிராமங்களிலும் புதன்கிழமை காலை 8 முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.